பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேட்டூர் அணையிலிருந்து விரைவில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், இருமொழிக் கொள்கையில், தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்