தொழில் போட்டியால் தகராறு - தாக்குதல் : பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக பேட்டரி கடை உரிமையாளர் மீது சகோதரர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக பேட்டரி கடை உரிமையாளர் மீது சகோதரர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், முகமது ரபீக் என்பவரும், கனிமொழி என்பவரும் பேட்டரி கடை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருப்பதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கனிமொழியின் கடையில் பணிபுரிந்த சையது மற்றும் அவரின் தம்பி அபு ஆகிய இருவரும் சேர்ந்து, முகமது ரபீக்கை கடைக்குள் புகுந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.
Next Story