ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு : கைதான 4 பேருக்கு காவல் நீட்டிப்பு
x
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேரின் காவலை வரும் 28 ந்தேதி வரை நீட்டித்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்