தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு

டெல்லி சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வை சிபிஎஸ்இ திரும்பப்பெற்றுள்ளது.
தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற்றது சிபிஎஸ்இ, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அறிவிப்பு
x
டெல்லி சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கான தேர்வு கட்டண உயர்வை சிபிஎஸ்இ திரும்பப்பெற்றுள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு எஸ்சி எஸ்டி பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை 50 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு டெல்லி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பழைய கட்டணமான 50 ரூபாய்  மட்டுமே தேர்வு கட்டணமாக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் என்றும் கட்டண உயர்வை  டெல்லி அரசிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்