தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.க-விடம் கேள்வி கேட்க கூடாது - தமிழிசை

தமிழக திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து பா.ஜ.க. விடம் கேள்வி கேட்க கூடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தமிழக திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து பா.ஜ.க. விடம் கேள்வி கேட்க கூடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய  விருதுகள் நடுவர்கள் மூலம் வழங்கப்படுவதாகவும், நடுவர்கள் குழுவில் பா.ஜ.க.வினர் யாரும் இல்லை எனவும் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளாக கூறிய தமிழிசை, விஜய்சேதுபதியின் கருத்துக்கு பதில் சொல்ல மறுத்தவிட்டார்.  விளம்பரம் செய்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகவும் தமிழிசை குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்