வால்பாறையில் தொடர் மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வால்பாறையில் தொடர் மழை - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
x
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பச்சை மலை, கரிமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு  முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.  
தொடர் மழை காரணமாக  வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்