குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் : சாலையில் படுத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொட்டியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மணப்பாறை - பாலக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story