"நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு"

நெல்லை முன்னாள் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
x
நெல்லை ரெட்டியார்பட்டியில் தி.மு.க. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய 3 பேர் கடந்த 23 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தி.மு.க நிர்வாகியான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் கொலை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்