வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம் - ஸ்டாலின்

மக்களின் மனங்களில் திமுகவே நிரந்தரமாக ஆட்சி செய்கிறது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் வெற்றிக்கனி பறித்திடுவோம் - ஸ்டாலின்
x
37 தொகுதிகளில்  பெற்ற வெற்றி முழுமை பெற, வேலூரிலும் வெற்றிக்கனியை பறித்திடுவோம் என்று தெரிவித்துள்ளார். ஆசை வார்த்தைகளாலும் அடுக்கடுக்கான பொய்களாலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தாலும் மக்களின் மனங்களில் திமுகவே நிரந்தரமாக ஆட்சி செய்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தி.மு.கழகக் கூட்டணியின் மக்களவை உறுப்பினர்களின் வேகமும் விவேகமும்  நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை  நிலைநாட்டி வருவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மக்கள் எதிர்ப்பார்க்கும் ஆட்சி மாற்றத்தை ஜனநாயக முறையில் திமுக ஏற்படுத்தும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்