4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது
x
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் சமீபத்தில் 4 வயது சிறுமியை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பாலியல் வன்முறை செய்து கொன்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில். வெள்ளவேடு உள்ள செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த ஒரு தம்பதியர் வந்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இவர்கள் இங்கே தங்கி வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிறுமி உள்ளார்.  செங்கல் சூளையில் வேலை முடிந்து பெற்றோர் வீடுதிரும்பிய போது  சிறுமியை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்தும் மகளை காணாததால் அதிர்ந்து போன  பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுமி அந்த பகுதியில் உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது  தெரியவந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் வேலை பார்க்கும் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்