ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள் ? உஷார்... ஒசூரில் நடந்த விபரீதம்

ஒசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்துக் கொண்டு பேசிய போது அது திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
இருசக்கர வாகனம் இயக்கும் போது திடீரென அழைப்பு வந்தால் வாகனத்தை கூட நிறுத்தாமல் சட்டென செல்போனை எடுத்து ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசுவது நாமாக கூட இருக்கலாம். ஆனால் அப்படி பேசிய இளைஞர் ஒருவருக்கு நடந்த பரிதாபமான சம்பவம் தான் இது. 

ஒசூர் சூளகிரி அருகே உள்ள புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது வண்டியை நிறுத்திய அவர், செல்போனை எடுத்து ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய படி சென்றுள்ளார். வாகனத்தை தொடர்ந்து அவர் ஓட்டிச் சென்ற நிலையில் திடீரென ஒரு சத்தம் கேட்டது... அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்த போது காதில் ரத்தத்துடன் சாலையோரம் விழுந்து கிடந்தார் ஆறுமுகம். ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து அவர் பேசிச் சென்ற போது திடீரென அது வெடித்ததில் காது, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் படுகாயமடைந்த ஆறுமுகம், தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்