"தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க.வுக்கு தமிழ் மீது அக்கறையில்லை என்றும், மக்கள் விரும்பாத எந்த திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது எனவும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள, மீன் அங்காடியை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரமான மீன்களை நியாயமான விலையில் கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் இது போன்ற மீன் அங்காடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தமிழ் மேல் அளவற்ற பற்று அ.தி.மு.க.வுக்கு உள்ளது என்றும் நிச்சயம் தமிழை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்