ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பெண் காவல் ஆய்வாளர் : செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்த முரளிதரன். எம்.ஏ. பட்டதாரி.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பெண் காவல் ஆய்வாளர் : செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரத்தை சேர்ந்த முரளிதரன். எம்.ஏ. பட்டதாரி.   தற்போது ஆட்டோ ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலையில், நேற்று இவரது ஆட்டோவில் பயணம் செய்தவர் மருந்து கடைமுன் நிறுத்த சொல்லியுள்ளார். அப்போது ரோந்து பணிக்காக வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி ஆட்டோவை ரோட்டோரமாக நிறுத்தியதற்காக ஓட்டுநர் முரளிதரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்