திருநங்கைகள் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் : கோவை காவல்துறை துணை ஆணையர் அறிவுரை
சமூகத்தில் உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில் திருநங்கைகள், பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
சமூகத்தில் உள்ள அவப்பெயரை நீக்கும் வகையில் திருநங்கைகள், பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பாலாஜி சரவணன் தெரிவித்தார். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற நடைநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், பொது மக்களுடன் சகோதரத்துவத்துடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, கோவை மாவட்டத்தில் இனி புகார்கள் வராத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அவர்களுக்கு கை வண்டி, தையல் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story