வள்ளியூர் : இளைஞர் வெட்டிக் கொலை... கை, கால்கள் துண்டானதால், ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கட்டட தொழிலாளி, மர்மநபர்களால், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வள்ளியூர் : இளைஞர் வெட்டிக் கொலை... கை, கால்கள் துண்டானதால், ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு
x
கோதைசேரியை சேர்ந்த 29 வயது செல்வகுமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். வழக்கம்போல், இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு சமுதாய கூடம் அருகே 10 மணியளவில் செல்போனில் விளையாடியபடி இருந்துள்ளார். அங்கு, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், செல்வகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் வருவதற்குள், மர்மநபர்கள் தப்பிவிட்டனர். உயிருக்கு போராடிய செல்வகுமாரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்வகுமார் கொலையால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கோதைசேரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்