"தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலைகள் திருட்டு" - இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர்

தமிழகத்தில் நீண்ட காலமாக கோயில்களில் சிலை திருட்டுகள் நடைபெற்று வருவதாக இந்து ஆச்சார்ய சபா மற்றும் துறவிகள் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
x
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சமீப காலமாக தமிழகத்தை சேர்ந்த நிறைய திருட்டு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு  மீட்கப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர். கோயிலில் நடைபெறும் சம்பவங்களுக்கு நிர்வாக அதிகாரிதான் பொறுப்பு என்று கூறிய அவர்கள், சிலை திருட்டு சம்பவங்களில் நேரடியாக உயர் அதிகாரிகளை கைது செய்வது முறையல்ல என்றும் தெரிவித்தனர். இதனால் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள் தயங்குவதாகவும், கோவில் திருப்பணிக்கு நன்கொடை தருபவர்கள் மீது களங்கம் ஏற்படுத்த கூடாது என்றும் இந்து ஆச்சார்ய சபா மற்றும்  துறவிகள் பேரவையினர் கூறினர். காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவர் மீது குற்றம் சுமத்த கூடாது என்றும், ரகசியமாக விசாரித்து குற்றவாளி என்று அறிவித்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவரின் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்