"புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுக்குள் முழுமை அடையும்" - அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுகளுக்குள் முழுமை அடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுக்குள் முழுமை அடையும் - அமைச்சர் தங்கமணி தகவல்
x
சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி ஓரிரு ஆண்டுகளுக்குள் முழுமை அடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மா.சுப்ரமணியன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைத்து தர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, சைதாப்பேட்டையில் அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறினார். மேலும் சென்னையில் அடுத்த  ஓரிரு ஆண்டிற்குள் புதைவட தடங்கள் அமைக்கும் பணிகள் முழுமையடையும் என்றார். 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் ஆனால் சைதாப்பேட்டை பகுதி மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றார். எனவே உறுப்பினர் இடம் தேர்வு செய்து தரும் பட்சத்தில் துணை மின் நிலையம் அமைத்து தரப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்