திருப்பதியில் முகிலன் கண்டுபிடிப்பு - ஆந்திர ரயில்வே போலீசார் விளக்கம்...

திருப்பதியில் முகிலன் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி..? என ஆந்திர ரயில்வே போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர்.
x
திருப்பதி ரயில்வே நிலையத்தில் ஒருவர் அடாவடியாக நடந்து கொள்வதாக வந்த புகாரையடுத்து ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மன்னார்குடி விரைவு ரயிலில் வந்து இறங்கிய அந்த நபர் கோஷங்களை எழுப்பி பயணிகளுக்கு இடையூறு செய்ததால் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். தமிழில் பேசிய அவர், காட்பாடி செல்ல வேண்டும் என்று கூறியதால் 4 காவலர்கள் துணையுடன் அவரை திருப்பதி- காட்பாடி பாசஞ்சர் ரயிலில் அனுப்பி வைத்ததாக ஆந்திர ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தான் முகிலன் என்று பின்னர் தெரிய வந்ததாகவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்