"உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

எதிர்கால தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சட்டபேரவையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
உயர்மின் கோபுர திட்டம்- அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி
x
சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, புதைவட கம்பிகள் மூலமாக 800 மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவருவது சாத்தியமில்லாத ஒன்று என்பதால் தான் உயர் கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று உடலில் லைட் எரிவதாக அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். மற்ற மாநிலங்களில் எல்லாம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படுவதால் மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்து, திட்டம் நின்றுவிடும் என்று கூறிய அவர், எதிர்கால தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்