ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமுதவள்ளி உள்ளிட்ட 11 பேருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 11 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு
x
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, அமுதவள்ளி உள்ளிட்ட 11 பேருக்கு, வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை வாகன ஓட்டுனர் முருகேசன், இடைத் தரகர்கள் உள்ளிட்ட 11 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. அவர்கள் அனைவரும், நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 11 பேரையும் விசாரித்த நீதிமன்றம், வரும் 18 ம் தேதிவரை அனைவருக்கும் நீதிமன்றக் காவலை நீடித்து உத்தரவிட்டது.இதனையடுத்து 11 பேரும், மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்