"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்

முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு? - பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
x
முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் வசமுள்ள மிகவும் முக்கியமான காவல், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகள் குறித்து கேள்வி நேரத்தில் கேள்விகள் கேட்கப்படுவதில்லையே எனக் கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முதலமைச்சர் தயாராகவே இருக்கிறார் என்றும் இனி கேள்விகள் இடம்பெறும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்