பழனி : சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனுக்கு காதணி விழா நடைபெறவிருந்த நிலையில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு‌வேன் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
பழனி : சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனுக்கு காதணி விழா நடைபெறவிருந்த நிலையில் சோகம்
x
கோரிக்கடவு பகுதியை சேர்ந்த விவசாயி பகவதி. இவர் தனது மகனுக்கு காதணி விழா நடத்த இருந்தார். இதற்காக தனது மனைவி விஜயா மற்றும் லட்சுமி ஆகியோருடன் இருச்சக்கர வாகனத்தில் அழைப்பிதழ் வழங்க பகவதி சென்றுள்ளார். அப்போது சரக்கு வேன் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பகவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து சரக்கு வேன் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் வண்டியை ஓட்டியது தெரியவந்தது. இன்னும் 2 நாட்களில் மகனுக்கு காதணி விழா நடைபெற உள்ள நிலையில், குழந்தையின் பெற்றோர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்