தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்

தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்
x
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அது தன்னுடைய சொந்த கருத்தல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து தமிழக மக்களை விமர்சித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை அரசியல் கட்சிகள் போராட்டம்  நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், எந்த உள்நோக்கத்துடன் தான் கருத்து கூறவில்லை என்றும் மக்களின் பார்வை இது  என்று குறிப்பிட்டே கருத்து பதிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்