சென்னை தண்ணீர் பஞ்சம் - 'டைட்டானிக்' ஹீரோ வேதனை

'மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' என பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ தெரிவித்துள்ளார்.
x
'மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' என பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், நான்கு முக்கிய ஏரிகள் முற்றிலுமாக வறண்டு விட்டதால் தென்னிந்திய நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக கூறியுள்ளார். குடிநீருக்காக மக்கள் பலமணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், 'தண்ணீர் தட்டுப்பாட்டால், உணவகம், விடுதிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மாற்று நீர் ஆதாரங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசித்து வரும் நிலையில், மக்கள் மழைக்காக பிரார்த்தனை செய்து வருவதாகவும் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ பதிவிட்டுள்ளார். சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அவரது பதிவு, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்