திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, 200 கிலோ பித்தளையால் வடிவமைக்கப்பட்ட கோயில் விமான வாகனம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளது.
திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்
x
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள சிற்பக்கூடத்தில் இதனை தயாரிக்கும் பணி கடந்த 2 மாதங்களாக, நடைபெற்றது. சுத்தமான பித்தளையில் இதனை செய்து கொடுக்குமாறு, திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கேட்டதன் பேரில், 200 கிலோ பித்தளையில் இது செய்யப்பட்டுள்ளது. ஏரோபிளேன் வடிவத்தில், ஐந்தரை அடி அகலம், 6 அடி நீளத்தில் உருவாகி வரும் இந்த வாகனத்தை, ஸ்தபதி விஜயகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் செய்தனர். சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்கு, இந்த விமான வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. 2 நாட்களில் இது, திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்