ஒட்டன்சத்திரம் அருகே புகழ்பெற்ற மாட்டுச்சந்தை : வறட்சியால் விற்பனை மந்தம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, புகழ்பெற்ற மாட்டுச்சந்தை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அருகே புகழ்பெற்ற மாட்டுச்சந்தை : வறட்சியால் விற்பனை மந்தம்
x
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, புகழ்பெற்ற மாட்டுச்சந்தை நடைபெற்றது. திருச்சி, தேனி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பல வகையான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மூக்கனாங் கயிறு, சங்கு, மணிகள், சலங்கைகள் உள்ளிட்ட மாடுகளுக்கு, தேவையான பொருட்கள் விற்கப்பட்டன. தண்ணீர் இன்றி, வறட்சி காரணமாகவும், விவசாயம் பாதிக்கப்பட்டதாலும், மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக விற்பதை விட பாதி விலைக்கே மாடுகள் விற்பனை ஆவதால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்