"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் பருவமழை தாக்கம் காரணமாக, தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு லோசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி,கடலூர், நாகை,திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தற்போது வலுவடைந்து வருவதாலும், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்