பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
x
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில், 141 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பழகன், 6 ஆயிரத்து 915 இடங்கள் மாற்றத்திறனாளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், 141 பேர் மட்டுமே  விண்ணப்பித்துள்ளதால், அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று, தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்