ஒரே நாளில் 10 செயின் பறிப்பு - அச்சத்தில் பெண்கள்...

சென்னையில் ஒரே நாளில் 10 செயின் பறிப்பு சம்பவம் நடந்திருப்பது, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை தேனாம்பேட்டை சீத்தையம்மாள் காலணியில், நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பைக்கில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். அப்போது அந்த பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதே போல், சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க மர்ம நபர்கள் முயற்சித்தனர். ஆனால், செல்வி தடுக்க, மர்ம நபர்கள் அவரை உதைத்தும், அறைந்தும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் செயினை பறிக்க முடியாததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதே போல், ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், ஆதம்பாக்கம் என அடுத்தடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார்,வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்