சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் - விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி

சாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதால், விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருதில் இந்தி எழுத்துகள் - விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி
x
சாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளதால், விருது பெற்ற எழுத்தாளர் யூசுப் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனக்கு துளியும் தெரியாத இந்தி மொழி கேடயத்தில் பொறிக்கப்பட்டுள்ளதால் பயனில்லை எனக் குறிப்பிட்ட அவர், தனது அதிருப்தியை சாகித்ய அகாடமி நிறுவனத்திடம் தெரிவித்தாக கூறினார். இது குறித்து பரிசீலிப்பதாக அந்த நிறுவனம் உறுதி அளித்திருப்பதாக எழுத்தாளர் யூசுப் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிப்பெயர்ப்பு தமிழ் பிரிவுக்கான, விருது குளச்சல் பகுதியை சேர்ந்த யூசுப்புக்கு கடந்த 14ஆம் தேதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்