குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது

நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது
x
நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் எதிரொலியாக 3 நாட்கள் முன்பு வரை நெல்லையில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மழை இல்லாததால் குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறைந்தது. இதே போல் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு வரக்கூடிய நீரின் வரத்து 150 கன அடிக்கும் குறைவாக உள்ளது. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. காலை நிவரப்படி பாபநாசம் அணையில் 39 அடியும், சேர்வலாறு அணையில் 56 அடியும், மணிமுத்தாறு அணையில் 56 அடியும் நீர் இருப்பு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்