மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம்  ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியான்பட்டறை என்னும் பகுதியில் ஒரு விட்டில் மின் கசிவு காரணமாக திடீரென்று ஏற்பட்டது. தீ விபத்தில் அருகருகே இருந்த ஐந்து தகடு மற்றும் ஓலை வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது இதில் மும்தாஜ் என்பவருக்கு சொந்தமான ஏழு ஆடுகளும் பலியாகின மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர் தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது 

Next Story

மேலும் செய்திகள்