கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் திருநங்கையின் சடலம் கண்டெடுப்பு.
கிணற்றில் திருநங்கை சடலம் - கொலையா..? தற்கொலையா..? என போலீசார் விசாரணை
x
நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டை அருகே வெள்ளகோவில் கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
சம்பவ இடத்திற்கு விரைந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் குருக்கள்பட்டியை சேர்ந்த திருநங்கை நவீனா என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்