குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்

தமிழக அரசின், குரூப் 4 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்
x
தமிழக அரசின், குரூப் 4 பணி இடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணி இடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு, ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்