திமுக சார்பில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தயாநிதி மாறன்

சென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.
x
சென்னை யானைக்கவுனி பகுதியில் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் திமுக சார்பில் இலவசமாக குடிநீர் வழங்குமாறு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அ​றிவுறுத்தி இருந்தார். அதன்படி சென்னை யானைக்கவுனி பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் திட்டத்தை தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், நாடாளுமன்றத்திலும் குடிநீர் பிரச்சினை குறித்து திமுக குரல் எழுப்பும் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்