ஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க அழைக்கும் போஸ்டர்...

ஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டியில் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க அழைக்கும் போஸ்டர்...
x
கட்சி, ஆட்சியை தலைமை ஏற்க வாருங்கள் என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுத்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சரான ஓ.பி.எஸ் அவர்களே தலைமை ஏற்க வாருங்கள் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவண் தர்மயுத்த தொண்டர்கள் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒற்றை தலைமை குறித்து யாரும் பேசக் கூடாது என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ள நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்