"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வைகோ

தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்​கொண்டுள்ளார்
x
தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக்​கொண்டுள்ளார். தண்ணீர் பிரச்சனை இன்னும் 15 நாட்களில் மிக மோசமான நிலையை எட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். நீர் நிலைகளை தூர்வாராமல் இருந்தது தான் தற்போது தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டிய வைகோ, மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழ் நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் குடிநீருக்கே தண்ணீர் இல்லா நிலை ஏற்படும் என்றார்

Next Story

மேலும் செய்திகள்