முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் ராஜ் சத்யன்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கூறினார். இந்நிலையில்அவரது இந்த கருத்துக்கு அவரது மகனும், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்சத்யன், ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்திலும், கட்சியின் நிர்வாக முறைகள் மற்றும் தேர்தல் முடிவுகள் பற்றிய தங்கள் கருத்துக்களை பொதுவெளியில் கூறவேண்டாம் எனன்ற அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையையும் அத்துடன் இணைத்து வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு சென்னையில் முதல்வரை சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்கு ராஜ் சத்யன் சென்று, அவரிடம் பேசினார்.
Next Story