காவிரி நீர் - கேட்டதும்... கிடைத்ததும்...
டெல்டா பாசனத்திற்காக இதுவரை, 15 முறை மட்டுமே ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து, பெரும் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம், அம்மாநில அரசு காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அச்சமயங்களில் மேட்டூருக்கு வழங்க வேண்டிய நீரை விட கூடுதலாக தண்ணீர் வந்தடைகிறது. இதனை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் என்பதை கருத்தில் கொள்ளமுடியாது என்பது விவசாயிகளின் வாதம்.
அதேபோல் 2014-15 ஆம் ஆண்டில் 37 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வழங்க வேண்டியதை விட குறைவான தண்ணீரையே கர்நாடகா வழங்கியது. 2015-16 ஆம் ஆண்டில் 36 டிஎம்சி குறைவாகவும், 2016-17 ஆம் ஆண்டில் 123 டிஎம்சி குறைவாகவும், 2017-18 ஆம் ஆண்டில் 77 டிஎம்சி குறைவாகவும் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டில் கர்நாடகாவில் பெய்த கனமழை மற்றும் வரலாறு காரணாத வெள்ளம் காரணமாக அதிக அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. 2018-19ஆம் ஆண்டில் 371 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டது. இது வழங்க வேண்டியதை விட 194 டிஎம்சி அதிகமாகும். ஆனால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் வரை 9 புள்ளி ஒன்பது இரண்டு சதவீதம் டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்கவேண்டும். ஆனால், இதுவரை பூஜியம் புள்ளி ஒன்று ஒன்பது சதவீதம் தண்ணீரை மட்டுமே வழங்கியுள்ளது.
இது வழங்க வேண்டியதை விட 9 புள்ளி ஏழு மூன்று சதவீதம் குறைவாகும். vஇந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி இருக்கும் போது மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் தற்போது 45 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கவே வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 85 ஆண்டுகளில் 15 முறை மட்டுமே ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 59 முறை ஜூன் 12ஆம் தேதிக்கு பிறகே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் முழுமையாக நெல் சாகுபடி செய்யமுடியும்.
Next Story