நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளன.
நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்
x
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிப்பு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தாள்  ஒன்றுக்கான தேர்வு நாளையும், இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளன.  தாள்  ஒன்றுக்கான தேர்வில் 1 லட்சத்து 83 ஆயிரம் பேரும், தாள்  2 கான தேர்வில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேரும்  என ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

இந்த நிலையில், தேர்வு பணிகளை கண்காணிக்க, நியமிக்கப்பட் ஆசிரியர்கள் அனைவரும், நேற்றே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். தகுதி தேர்வு முடிக்காமல் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு இந்த தேர்வு கடைசி வாய்ப்பு என்பதும், இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை இழக்க வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்