தஞ்சை கல்லணை உடையும் அபாயம்...

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் கரை அருகே கல்லணைக்கு மிக அருகில் திருச்சென்னம்பூண்டி என்ற பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
தஞ்சை கல்லணை உடையும் அபாயம்...
x
தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் கரை அருகே கல்லணைக்கு மிக அருகில் திருச்சென்னம்பூண்டி என்ற பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் மூன்று முறை மணல் குவாரி அமைத்து சுமார் 20 அடி ஆழம் வரை மணல் அள்ளியதால், சுக்கான் பார், திருச்சென்னம்பூண்டி திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. தற்போது, மீண்டும் மணல் குவாரி அமைப்பதால் கல்லணையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக, பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் புகார் தெரிவித்தனர்.
 

Next Story

மேலும் செய்திகள்