தயாரித்த 'குரு மருந்துக்கு' காப்புரிமை பெற முயற்சிக்கும் ஜோதிடர்...

சித்தர்கள் முறைப்படி, தயாரிக்கப்பட்ட மருந்தின் மூலம் குடிநீர் மற்றும் பழங்களைப் பாதுகாக்க முடியும் என பழனியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
x
திண்டுக்கல் மாவட்டம்  பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஜோதிடரான இவர், சித்த மருத்துவ முறைப்படி, குரு மருந்து என்பதை தயாரித்துள்ளதாக  கூறியுள்ளார். கடந்த ஒன்பது வருடமாக முயற்சி செய்து, தான் தயாரித்துள்ள மருந்தின் மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையும் தெரிவிக்கிறார். அந்த மரு;ந்தின் மூலம், குடிநீர், பழங்கள், காய்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம் என்று கூறுவதுடன், தீக்காயங்களுக்கு பயன்படுத்தினால் விரைவில் குணமடைவதாகவும் கூறுகிறார். அந்த மருந்துக்கு காப்புரிமை பதிவு செய்ய முயற்சி செய்வதாகவும் ஜோதிடர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்