கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சென்ற கேரளா அரசு பேரூந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு சென்ற கேரளா அரசு பேரூந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலையில் கோபாலபுரம் சோதனை சாவடியில் பொள்ளாச்சி தாலுக்கா போலீசார் அந்த பேருந்தை மடக்கி சோதனை நடத்தினர். கேரள மாநிலம்  பெருந்தலைமன்னா பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்பவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பொட்டலத்தை, போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது, அந்த பொட்டலத்தில், கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார்  ஹக்கீமை கைது செய்ததுடன்,  அவரிடம் இருந்த  8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்