மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மலைப்பாதையில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானை : யானையை விரட்ட கோரிக்கை
x
நீலகிரி மாவட்டம் குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் பலாப்பழங்கள் மரத்தில் பழுத்து தொங்குவதால் யானைகள் வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.குரும்பாடி கே என் ஆர் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் வெளியே செல்ல பயமாக உள்ளதாகவும், அந்த யானை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவதாவும் அப்குதி மக்கள் தெரிவித்துள்ளனர்.யானையை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்