சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்த காப்பக மாணவர்கள்...

இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த காப்பக மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
x
காப்பகங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய குழந்தைகள் நலச் சங்கம் ஆண்டு தோறும் சுற்றுலா நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் காப்பகத்தில் தங்கி பயிலும் பின்தங்கிய மாணவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 7 நாட்களாக திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. முகாமில் தமிழகத்திலிருந்து சென்னை காப்பகத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து 140 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்றுள்ள மாணவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அரண்மனையின் வரலாறு குறித்து விளக்கப்பட்டது. இதுவரை கண்டிராத அரிய பல இடங்களுக்கு அழைத்து சென்றதால் இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் மகிழச்சியுடன் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்