திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி : குடிநீர் தட்டுப்பாட்டால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
திருத்தணி அருகே குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முத்து கொண்டாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்