கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும்.
x
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும். மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்கள், விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டடக்கலை மக்களை பிரமிக்க வைக்கிறது. கோடைகாலம்  என்பதால் பலரும் கடலில் இறங்கி குளித்தும், குதூகலித்தும் கொண்டாடுகின்றனர்.   

வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் உள்ள மீன் கடைகளில் விற்கப்படும் மீன்கள் விலைக்குறைவு என்பதால் மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிட்டுகின்றனர். மேலும், வேளாங்கண்ணியில் தங்குவதற்கான வசதிகளும் நிறைவாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். வேளாங்கண்ணி நகரில் மாதா ஆலயம், கடல் என அனைத்தும் கொண்டாடும் விதமாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்