சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை

சென்னையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்ததை தொடர்ந்து கடைக்கு வந்து பார்த்த போது 6 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், 94 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதிகாலை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்களை மீரான் என்பவர் பார்த்ததோடு அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐசிஎப் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளையர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்