தஞ்சை டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது - அன்புமணி
தஞ்சை டெல்டா பகுதியில் 274 ஆழ்துளை கிணறு மூலமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க மாநில அரசு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை டெல்டா பகுதியில் 274 ஆழ்துளை கிணறு மூலமாக ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனத்துக்குமுதற்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்து என்றும், இதற்கு மாநில அரசு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு, தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப சட்டமுன்வடிவை அரசு கொண்டு வர வலியுறுத்துவோம் என்றும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் பா.ம.க.போராட்டம் நடத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Next Story