அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து - சக்கரத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
x
காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில், பெரியகரும்பூர் என்ற இடத்திலேயே இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக சென்ற பேருந்து, முன்பு சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அப்போது எதிரே 3 கல்லூரி மாணவர்கள், ஒரே பைக்கில் வந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கினர். இதில் ரவிக்குமார், வெங்கடேசன் ஆகியோர் உயிரிழக்க, பாஸ்கர் என்ற மாணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காட்சிகள் பேருந்தின் முன் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்